வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்ப்பாட்டில் சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு இன்று (01.03.2017) காலை 9.30 மணியளவில் நடைபவணியொன்று நடைபெற்றது.
வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முன்பாக ஆரம்பமாகிய நடைபவணி வவுனியா மாவட்ட செயலகத்தில் நிறைவடைந்ததுடன், வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இன் நடைபவணியில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் , வவுனியா மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.