வவுனியாவில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சபை பிராந்தியக் காரியாலயம் திறப்பு!!

338

 
வவுனியா மில் வீதியில் இன்று (01.03.2017) காலை 9 மணியளவில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சபையின் பிராந்தியக் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் ஜ.எம்.றபீக், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா மாவட்ட செயலாளர் எம்.பி.றோஹகன புஸ்பகுமார, வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக ஆகியோர் கலந்து கொண்டு ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச்சபையின் பிராந்தியக்காரியலாயத்தினை திறந்து வைத்தனர்.

அத்துடன் பலகாலமாக கொழும்பில் பெற்றுவந்த சேவைகளை இக் காரியாலயம் திறந்து வைத்ததனூடாக பலபகுதிகளிலுள்ள பொதுமக்கள் இலகுவான முறையில் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.