பல சோதனைகளை கடந்து சாதனை படைக்க வரும் யாழ் யுவதி!!

259

யாழ்பாணத்தினை பிறப்பிடமாக கொண்ட ஈழத்து பெண் ஒருவர் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழக தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல நடன நிகழ்ச்சியான டான்சிங் கில்லாடி நிகழ்ச்சியிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

யாழ். நெல்லியடியில் இருந்து கடந்த கால யுத்தத்தின் போது புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வரும் ஈழத்து பெண் விதுர்ஷா ரத்னம் என்ற யுவதியை இவ்வாறு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வு பிரமாண்டமான முறையில் இடமபெற்றது. இதன் போது விதுர்ஷாவிற்கு ராணியாக அலங்கரித்து நடிகை சினேகா அவர்களினால் மகுடம் சூட்டப்பட்டது.

முன்னர் வேறு தொலைக்காட்சியில் குறித்த பெண் தொடர்பில் இடம்பெற்ற பிரச்சினைகள் காரணமாக அவரை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் மீண்டும் குறித்த நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டு தற்போது பல சோதனைகளை கடந்து சாதனை படைக்க இருக்கின்றார் விதுர்ஷா ரத்னம்.