அநுராதபுர வாகன விபத்தில் யாழ். மாணவன் பலி!!

225

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அநுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். நயினாதீவை சேர்ந்த 24 வயதான தவகுலரத்திணம் ரகுராம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக மாணவருடன், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்து போது, வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.