தனது கள்ளக் காதலியை கொலை செய்ததாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2008ம் ஆண்டு லெலிமட பகுதியில் வைத்து சந்தேகநபரால் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.இதற்கமைய அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.