குழந்தை ஒன்று தொடர்ந்து அழுது கொண்டிருந்தமையால் தாய் ஒருவர் குழந்தையை தரையில் போட்டு எட்டி உதைக்கும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த சென் என்ற 27 வயதுடைய பெண் ஒருவரே தொடர்ந்து அழுதுகொண்டிந்த தனது குழந்தையை தரையில் போட்டு காலால் எட்டி உதைத்துள்ளார். அதன் பின்னர் தனது கைகளால் குழந்தையை தூக்கியெறிந்துள்ளார்.
இச்சம்பவத்தை அருகில் இருந்த நபர் ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
குறித்த காணொளி மில்லியன் கணக்கானவர்களால் பார்வையிடப்பட்டுள்ளதோடு தாயிற்கு எதிரான கருத்துக்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.