வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் படுகாயம் : இருவர் தப்பி ஓட்டம்!!

380

 
வவுனியாவில் நேற்று (01.03.2017) இரவு 7.45 மணியளவில் மன்னார் வீதியிலுள்ள தொழில்நுட்பக்கல்லூரிக்கு முன்னால் இரு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு 7.45 மணியளவில் மன்னார் வீதியிலுள்ள தொழிநுட்பக்கல்லூரிக்கு முன்பாக மன்னார் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கில் வவுனியா பகுதியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கில் பாலாமைக்கல் வீதியில் திருப்ப முயன்றபோது மன்னார் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிலுடன் எதிர் எதிரே மோதி விபத்திற்குள்ளாகியது.

இதையடுத்து வவுனியா வீதியிலிருந்து மன்னார் வீதி நான்காம் கட்டைக்கு நெல் கொள்வனவு செய்வதற்காக பின்னால் சென்ற கன்டர் ரக வாகனம் விபத்திற்குள்ளாகி நடு வீதியில் கிடந்த மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளியுள்ளது.

எனினும் நேருக்கு நேர் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இரு மோட்டார் சைக்கில்களில் பயணித்த சுஜீபன் வயது 24, அஜந்தன் வயது 21 இருவரும் மோட்டார் சைக்கிலை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து பாலாமைக்கல் வீதிக்கு மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றபோது படுகாயமடைந்த எஸ்.குமார்(வயது 28) வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவத்தையடுத்து நெளுக்குளம் பொலிசார் மற்றும் வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கில்களும் கன்டர் வாகனத்தில் ஏற்றப்பட்டு நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.