கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு : 20 பேர் கைது!!

523

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த 9 பேரும், சம்பவம் இடம்பெற்ற வேளையிற்கு நீதிமன்றத்திற்கு வருகை தந்த 11 பேருமே இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும், பாதாள குழு ஒன்றின் தலைவரான தெமுனி, ஹெரால்ட் ரோஹன என்ற கொனாகோவிலே ரோஹா என்பவரை கொலை செய்வதற்காக இந்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.