வவுனியாவில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்வு!!

242

 
வடமாகாண சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் பெண்கள் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்ப பயனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு தென்னங்கன்றுகள் விங்கும் நிகழ்வு நேற்று(01.03) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு சங்க சமாச அலுவலகத்தில் நடைபெற்றது.

சம்மேளனத் தலைவர் நா. சனாதிராசா, சம்மேளன செயலாளர் திருமதி.எஸ்.பரந்தாமன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வி.கே.ரவீந்திரநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வவுனியா மாவட்டத்திலுள்ள சிக்கன கூட்டுறவு சங்க அங்கத்தவர்களின் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 100 குடும்பங்களுக்கு 5 தென்னைமரக்கன்று படி 500 தென்னைமரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.