வவுனியா காணாமல்போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு பல்கலைக்கழக சமூகம் ஆதரவு!!

260

 
வவுனியாவில் தொடரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கு நேற்று (01.03.2017) பிற்பகல் 2 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் நோக்கில் ஆசிரியர் சங்கம், உத்தியோகத்தர்கள் மாணவர்கள், என பேரணியாக வந்து காணாமற்போன உறவுகளுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்றுடன் மூன்றாவது நாளாகவும் மேற்கொண்டுவருகின்றனர்.

தபால் மூலமான கவனயீர்ப்பு போராட்டத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.