வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 24மணிநேர பணிப்புறக்கணிப்பு!!

229

 
மாலபே தனியார் கல்வி நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாகவே இன்று (02.03.2017) காலை 8.00மணி தொடக்கம் நாளை (03.03.2017) காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் மாத்திரமே இயங்கவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் அகிலேந்திரன் தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு தொடர்பாக வைத்தியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இது இலங்கை மருத்துவ சேவையின் தராதரம் பற்றிய போராட்டம். தரமற்ற மருத்துவர்களை அரசியல் செல்வாக்குக்காகவும் பணத்துக்காகவும் உருவாக்கி நோயாளர்களின் உயிரை பணயம் வைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம் எனத் தெரிவித்தார்.