தற்கொலைகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ள பேஸ்புக்!!

233

பேஸ்புக் சமூக வலைத்தள வாடிக்கையாளர்கள் தற்கொலை செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பேஸ்புக் முடிவு செய்துள்ளது.

பேஸ்புக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தற்கொலை தடுப்பு டூல்களை (suicide prevention tools) பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் மற்றும் மெசெஞ்சர் சேவைகளில் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 14 வயதுடைய குழந்தை ஒன்று கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்ததை பேஸ்புக் நேரலை செய்தது.

பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங்கில் (நேரலை) ஆபாசமான தரவுகளைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவினை பேஸ்புக் பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அப்டேட் செய்யப்பட்டுள்ள புதிய டூல்களைக் கொண்ட பேஸ்புக் லைவ் வீடியோக்களைப் பார்ப்பவர்கள் அதனைப் பதிவு செய்வோரை நேரடியாகத் தொடர்புகொள்ளவும் பேஸ்புக்கிற்கு தெரியப்படுத்தவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.