விபத்தில் ஒருவர் படுகாயம்!!

217

பாண்டிருப்பு – நற்பட்டிமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் 2.15 மணியளவில் நற்பட்டிமுனை பிரதான எல்லை வீதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் நேர்ந்துள்ளது.

அத்துடன், சிறிய ரக ஊர்தி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்தவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.