வவுனியா கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டுகழகம் வெற்றி பெற்று தேசிய போட்டிக்குத் தெரிவு!!

386

 
வவுனியா மாவட்ட இளைஞர் கழகமும் ரூபவாகினி கூட்டுத்தாபனமும் இணைந்து நடாத்திய வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்கழுக்கிடையிலான 8 அணிகள் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டுக்கழகம் மாவட்டரீதியில் முதல்நிலையில் வெற்றி பெற்று தேசிய ரீதியில் நடைபெற இருக்கும் கரப்பந்தாட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இவ் வெற்றியின்மூலம் இவர்கள் கிராமத்துக்கும் மட்டுமல்லாது வவுனியா மாவட்டத்திற்கும் பொருமை சேர்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது கடந்தவருடங்களுடன் இரண்டாவது தடவைகள் தேசிய போட்டிகளில் வவுனியா மாவட்ட ரீதியில் பங்குபெற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது