மதுபோதையில் உணவுப்பொதியுடன் அதிசக்தி வாய்ந்த மின் கம்பத்தில் ஏறிய நபர்!!

228

அதிகமான மது போதையில் இருந்த ஒருவர் உணவை உண்ண அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பம் ஒன்றின் மீது ஏறிய சம்பவம் நாவலப்பிட்டி நகரில் நேற்று நடந்துள்ளது.

மது போதையில் காணப்பட்ட இந்த நபர் சோறு பொதி மற்றும் தண்ணீர் போத்தலுடன் மின் கம்பத்தில் ஏறியுள்ளார்.

இந்த சம்பவத்தால் நாவலப்பிட்டி நகரில் ஒரு குழப்பான நிலைமை ஏற்பட்டது. மது போதையில் ஒருவர் மின் கம்பத்தில் ஏறுவதை கண்ட இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவரும் நகரில் இருந்த இளைஞர்களும் நாவலப்பிட்டி மின்சார சபை அலுவலகத்திற்கு அறிவித்து மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து நபரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நகர சபை ஊழியர்கள் மின் கம்பத்தில் ஏறி மிகவும் சிரமத்திற்கு மத்தியில் மதுபோதையில் இருந்த நபரை மின் கம்பத்தில் இருந்து கீழே இறக்கியுள்ளனர்.

மது போதையில் இருந்த நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

50 வயதான இந்த நபர உலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.