வவுனியா பொதுவைத்தியசாலையில் பூப்பந்து விளையாட்டுத்திடல் திறந்துவைப்பு!!

395

 
வவுனியா பொதுவைத்தியசாலையில் பூப்பந்து விளையாட்டுத்திடல் இன்று (04.03.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக்கழகத்தின் 7மில்லியன் நிதியுதவியுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட பூப்பந்து வளையாட்டுத்தளம் ஏதிலியர் மறுவாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணி எஸ்.சி.சந்திரகாஷனினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், இலங்கைக்கான ஓபர் நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி சூரியகுமாரி, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் சுரேந்திரன், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.