வென்றது மண் மீட்புப் போராட்டம் : வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்!!

244

புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம் கடந்த 24 நாட்களின் பின்னர் மக்களின் போராட்டத்திற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் வெளியட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் காணிகளை மூன்று பகுதிகளாக விடுவிக்கப்படும் என ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஊடாக மக்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி மக்களின் ஒற்றுமைக்கும் மக்களின் போராட்டத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் இப்போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய அனைத்து பொது மக்களுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.