வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்தில் இதுவரை 4000 கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது!!

216

 
வவுனியா மக்களால் காணாமல் போனோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படுட்டு வரும் போராட்டம் 9வது நாளாகவும் இடம்பெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு தீர்வு கோரி 4000 கடிதங்கள் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் ஈழமக்க்ள புரட்சிகர விடுதுலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம், வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, ஆர்.இந்திரராசா உட்பட பலர் ஜனாதிபதிக்கான கடித்தினை அனுப்பி வைத்ததுடன் இதுவரை 45 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு தீர்வு வேண்டிய ஜனாதிபதிக்கு கடித்தினை அனுப்பி வைத்துள்ளனர்.

தாயக பிரதேசத்தில் கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக் கண்டிறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இச் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் மக்கள் ஆதரவுடன் 9வது நாளாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கான நடவடிக்கையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.