தலை இல்லாமல் கிடந்த சடலம் : 15 மீற்றர் தொலைவில் தலை கண்டுபிடிப்பு!!

203

புத்தளம் – குருணாகல் வீதியில், மதிரிகம பிரதேசத்தில் கால்வாய்க்கு அருகில் மீட்கப்பட்ட தலையில்லா சடலத்தின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியிலுள்ள பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த தலையில்லா சடலம் நேற்று கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இது குறித்து பொலிஸார், பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன்படி தலையில்லா சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் குறித்த தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சடலத்தின் தலையா இது என்பதை இனங்காண்பதற்காக மரபணு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆரம்ப மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.