வவுனியா பண்டாரிகுளம் மாடசாமி கோவில்-முனியப்பர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வயோதிபர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார். மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
இன்று காலை ஒன்பது மணியளவில் வீதியால் நடந்து வந்த வயோதிபர் அப்பகுதியிலிருந்த கடையொன்றினுள் குடிப்பதற்கு நீர் வேண்டி பருகிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து மரணமாகியுள்ளார்.
உக்குளாங்குளத்தை சேர்ந்த துரைராசா கணேசலிங்கம் 63 வயது என்பவரே இவ்வாறு வீழ்ந்து மரணமாகியுள்ளார். மேலும் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.