வவுனியாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வரை நேற்று முன்தினம் (03.03.2017) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 30.01.2017ம் திகதி வவுனியாவில் தொலைபேசி விற்பனை நிலையத்தில் 12,500 ரூபா பெருமதியான தொலைபேசியினை திருடிச்சென்ற நபரை வவுனியா பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன் வவுனியாவில் காரினுள் இருந்து பணத்திணை திருடிச்சென்ற ( 38,25,30) வயதுடைய இளைஞர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.






