புத்­தளம், மது­ர­க­மவில் தலை­யில்­லாத சடலம் மீட்பு : தலையை கண்டு பிடித்த பொலிஸ் மோப்ப நாய்கள்!!

529

 
புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புத்­தளம் – குரு­ணாகல் வீதியின் மது­ர­கம பிர­தே­சத்தின் காட்டுப் பகு­தி­யி­லி­ருந்து தலை துண்­டிக்­கப்­பட்ட, இனந்­தெ­ரி­யாத ஆண் ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­ட­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை மீன் பிடிக்கச் சென்று கொண்­டி­ருந்த இரு இளை­ஞர்கள் தலை­யில்­லாத நிலையில் சடலம் ஒன்று கிடப்­பதை அவ­தா­னித்து உட­ன­டி­யாக அது தொடர்பில் புத்­தளம் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து அங்கு சென்ற பொலிஸார் அச்­ச­ட­லத்தை மீட்­டுள்­ளனர்.

அதன்பின், குறித்த இடத்­திற்குச் சென்ற புத்­தளம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அநுர குண­வர்­தன தலை­மை­யி­லான குழு­வினர் ஆரம்பக் கட்ட விசா­ர­ணை­களை நடத்­தினர். அப்­பி­ர­தே­சத்தில் நடத்­திய சோதனை நட­வ­டிக்­கையின் போது சடலம் காணப்­பட்ட இடத்­துக்குச் சற்று தொலைவில் வீசப்­பட்­டி­ருந்த கத்தி ஒன்­றையும் மீட்­டுள்­ளனர்.

சம்­பவ இடத்­துக்குச் சென்ற புத்­தளம் பதில் நீதிவான் எம். ஏ. பசால் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பின்னர் சட­லத்தை பிரேத பரி­சோ­த­னைக்­காக புத்­தளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லு­மாறு உத்­த­ர­விட்­ட­தோடு குறித்த பிர­தே­சத்தில் மீண்டும் தேடுதல் நட­ வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறும் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

இத­னை­ய­டுத்து நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை புத்­தளம் பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் குழுக்கள் சடலம் காணப்­பட்ட பிர­தே­சத்தில் பொலிஸ் மோப்ப நாயின் உத­வி­யுடன் தேடுதல் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது.

இதன்போது சடலம் காணப்­பட்ட இடத்­துக்குச் சற்று தொலைவில் மீட்­கப்­பட்ட கத்தி கிடந்த திசையில் சென்ற மோப்ப நாய்கள் அவ் ­வ­ழியே சென்ற போது சற்று தொலைவில் பை ஒன்றில் காணப்­பட்ட தலையை கண்­டு­பி­டித்­தன. இத்­த­லை­யா­னது மேற்­படி சட­லத்­தி­னு­டை­ய­தாக இருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.

புத்­தளம் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜே.ஏ. சந்­தி­ர­சேன உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் எஸ்.பி.எஸ்.சி. சந்­த­நா­யக்கா ஆகி­யோரின் உத்­த­ரவின் பேரில் புத்­தளம் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அநுர குண­வர்­தன தலைமை யிலான குழு­வினர் இது தொடர்பில் மேல­திக விசாரணை­களை மேற்­கொண்டு வருகின்றனர்.