குழந்தையை குழிதோண்டி புதைத்த தாய் : கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் சம்பவம்!!

669

கிளி­நொச்சி ஆனை விழுந்தான் பிர­தே­சத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. கடந்த 5 நாட்­க­ளுக்கு முன்னர் 22 வய­து­டைய யுவதி ஒருவர் வீட்டில் பிர­ச­வித்த குழந்­தையை வீட்டின் பின்னால் உள்ள மல­சல கூடத்­துக்கு அருகில் குழி­தோண்டி புதைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட யுவதி மகப்­பேற்றின் பின்னர் ஏற்­பட்ட கடும் இரத்தப் போக்கின் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போது சம்­பவம் தொடர்பில் வைத்­தி­யர்­களின் விசா­ர­ணை­களின் பின்னர் தெரியவந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து கிளி­நொச்சி பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லை­ய­டுத்து சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட பெண் கொழும்பில் ஆடை­த்தொ­ழிற்­சாலை ஒன்றில் பணி புரிந்து வந்­துள்­ள­தா­கவும் குறை மாதத்தில் பிறந்த குழந்தை இறந்து பிறந்த நிலையில் பிள்­ளையை இவ்­வாறு குழி தோண்டி புதைத்­துள்­ள­தா­கவும் பொலி­ஸாரின் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.