வவுனியாவில் சமாதான விகாரை திறந்து வைப்பு!!

505

 
கடந்த 18.06.2016 அன்று இலங்கையின் பொலிஸ்மா அதிபர் தலைமையின் கீழ் வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் சமாதான விகாரையின் புனர் நிர்மானம் கட்டுமாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று (06.03.2017) காலை 6.45 மணியளவில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையின் கீழ் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

27 அரை அடி உயரமானதும் 44 அடி சுற்றுவட்டமுடைய விகாரையினது நிதி உதவியை இலங்கை பொலிஸ் திணைக்கள பௌத்த மத பிரிவிலுள்ள பொலிஸ் அதிகாரிகளால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவர்களது குடும்ப உறவுகள், மற்றும் சமூக பொலிஸ் பிரிவிலுள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நேற்று 05.03.2017 மாலை சர்வமத ஆராதனைகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஒரு அங்கமாக நூல் வெளியீடு, மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன் கற்பிணித்தாய்மாருக்கான போசாக்கு உணவு, வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், வடமத்திய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வவுனியா பிரதேச செயலாளர், யுத்தத்தினால் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.