வவுனியா தனியார் பேரூந்துகளில் பணியாற்றும் சாரதி நடத்துனர்களின் நலன்காக்க புதிய சங்கம்!!

937

 
வவுனியா தனியார் பேரூந்துகளில் பணியாற்றும் சாரதி நடத்துனர்களை உள்ளடக்கிய சங்மொன்று நேற்று (05.03.2017) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் கீழ் செயற்படும் வகையில் சாரதி நடத்துனர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ள இச் சங்கமானது வட மாகாணத்தில் முன்முதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் எஸ்.ரி.இராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் குறித்த சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் சாரதி நடத்துனர்களின் நடத்தை மற்றும் தனியார் பெரூந்துகளின் செயற்பாடுகள் தொடர்பாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இதன்போது வளக்கமளித்திருந்தார்.

இதனையடுத்து வவுனியா தனியார் பேரூந்து சாரதி நடத்துனர் சங்கத்தின் தலைவராக செல்வரட்னம் தவேந்திரன், செயலாளராக எம்.மயூரன், பொருளாளராக தெய்வேந்திரன் ஜெகதீஸ்வரன், உப தலைவராக கந்தசாமி நிரஞ்சன், உப செயலாளராக அமிர்தலிங்கம் சுதர்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், நிர்வாக உறுப்பினர்களாக எவ்.என்.கசன், புஸ்பராஜா சிவானந்தன், டபிள்யு. ஏ. காமினி, ஏ.எம்.இர்சாட் ஆகியோர் நிர்வாக உறுப்பினாகளாக தெரிவு செய்யப்பட்டதுடன் ஆலோசகராக சிவலோகமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டனர்.