வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்கிவைப்பு!!

742

 
வவுனியாவிலுள்ள வசதியற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு தாயக உறவுகளுக்கு உதவித்திட்டம் வழங்கு நிகழ்வு இன்று (06.03.2017) காலை 10.30 மணியளவில் வவுனியாவிலுள்ள இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய பரிபாலசபைத் தலைவர் து.இரத்தினசிங்கம் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட வசதியற்ற பல்கலை மாணவர்களுக்கு தலா 46 500 ரூபா வீதம் ஏழு மாணவர்களுக்கு அறிவுச்சுடர் நிதியூடாக வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஆலய பொருளாலர் திரு.சர்வானந்தம், செயலாளர் வைத்திய கலாநிதி பரமநாதன், ஆகியோர் கலந்து கொண்டு நிதி உதவிகளை வழங்கிவைத்தனர்.

நிகழ்வின் இறுதியில் தமிழ் விருட்சம் அமைப்பினால் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய பரிபாலன தலைவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டதுடன் நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.