வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

571

 
வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி ரமணி(60)என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இன்று (௦6.03.2017) இரவு மகளுடன் உணவு உட்கொண்டுவிட்டு வீட்டின் பின்புறம் தாய் சென்றதாகவும் நீண்ட நேரம் வராததையிட்டு தேடிச்சென்ற வேளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டதாகவும் பிள்ளைகள் தெரிவித்தனர்.

இதேவேளை இறந்த இப் பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.