இரண்டாவது திருமணம் செய்ய முனைந்த கணவரை நடுவீதியில் வைத்து அடித்த முதல் மனைவி!!(காணொளி)

689

கணவன் இரண்டாவது திருமணம் செய்ய முனைந்தபோது, முதல் மனைவியினால் வீதியில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வந்துள்ளதாவது, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சோனு என்பவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் ராக்கி என்ற பெண்ணை மணந்துள்ளார். மேலும் இவர்களுக்கு 12 வயதில் மகனொருவர் இருக்கிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் சோனு 18 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய முடிவுசெய்துள்ளார்.

மேலும் தனது முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல், சோனு இரண்டாவது திருமணத்தை செய்ய முனைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை அறிந்த ராக்கி தனது உறவினர்களுடன் சென்று சோனுவிடம் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் சோனு ராக்கியை யார் என்றே தெரியாது எனக்கூற, நடு வீதியில் வைத்து ராக்கியால் சோனு தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.