பெண்ணின் பணத்தை திருடியவர்கள் கடனட்டையில் ஆடைகளும் கொள்வனவு : தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள்!!

456

பொரளை பிர­தே­சத்தில் பஸ் ஒன்றில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரின் பெருந்­தொ­கை­யான பணத்துடனான பையை திரு­டி­ய­துடன் அதிலிருந்த கட­னட்­டையை கொண்டு வர்த்­தக நிலையம் ஒன்றில் ஆடை­களை கொள்­வ­னவு செய்த சந்தேக நபர்­க­ளான இரு பெண்­களை கைது செய்­வ­தற்­காக பொலிஸார் பொது­மக்­களின் உத­வியை கோரி­யுள்­ளனர்.

கடந்த 27 ஆம் திகதி காலை 10 – 11 மணிக்கு இடைப்­பட்ட நேரத்தில் இச்­சந்­தே­க­ந­பர்கள் இரு­வரும் பஸ்ஸில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த பெண் ஒருவ­ரி­ட­மி­ருந்து 102, 300 ரூபா பணத்­துடன் கூடிய கைப்பை ஒன்றை திரு­டி­ய­துடன் அதி­லி­ருந்த கட­னட்­டையை பயன்­ப­டு த்தி பொரளை பிர­தேசத்திலுள்ள பிர­பல ஆடை விற்­பனை நிலை­ய­மொன்றில் சுமார் 270, 705 ரூபா பெறு­ம­தி­யான ஆடை­களை கொள்­வ­னவு செய்­துள்­ளமை தொடர்பில் பொரளை பொலிஸ் நிலை­யத்­துக்கு கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இச்­சந்­தேக நபர்கள் இரு­வரும் திருட்டு கட­னட்­டையை உப­யோ­கித்து ஆடை கொள்­வ­னவில் ஈடு­படும் காட்­சிகள் குறித்த ஆடை விற்­பனை நிலை­யத்தில் பொருத்­தப்­பட்­டுள்ள பாது­காப்பு கெமராக்­களில் பதி­வா­கி­யுள்­ளன. அக்­காட்­சி­களை கொண்டு சந்­தேக நபர்­களின் முகங்­களை இனங்­கண்­டுள்ள பொலிஸார், அவர்­களை கைது செய்யும் பொருட்டு பொது­மக்­களின் உத­வியை கோரி­யுள்­ளனர்.

சந்­தே­க­ந­பர்­க­ளான படத்தில் காணும் பெண்கள் தொடர்பில் தகவல் தெரிந்­த­வர்கள் 071 – 85 91 587, 077 – 72 64 299, 011 – 26 93 938, 011 – 26 94 019 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறு பொலிஸ் ஊடக மத்திய நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.