பெண்­களை மாத்­திரம் ஊழி­யர்­க­ளாகக் கொண்ட பய­ணிகள் விமானம் முதல் தடவையாக உலகை சுற்றி வந்­தது!!

562

 
பெண்­களை மாத்­திரம் ஊழி­யர்­க­ளாகக் கொண்ட விமான பய­ணிகள் விமா­ன­மொன்றை முதல் தட­வை­யாக உலகை சுற்­றி­வரும் பய­ணத்தில் தான் ஈடு­ப­டுத்­தி­ய­தாக எயார் இண்­டியா நிறு­வனம் அறி­வித்­துள்­ளது.

நாளை அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்ள சர்­வ­தேச மகளிர் தினத்தை முன்­னிட்டு, கடந்த வாரம் இந்த விசேட விமான சேவை நடத்­தப்­பட்­ட­தாக அந்­நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.

எயார் இண்­டி­யாவின் பிளைட் ஏ.ஐ. 173 விமானம், கடந்த 27 ஆம் திகதி புது டில்­லி­யி­லி­ருந்து அமெ­ரிக்­காவின் சான் பிரா­சிஸ்கோ நகரை நோக்கி புறப்­பட்­டது. பசுபிக் சமுத்­தி­ரத்­துக்­கூ­டாக அமெ­ரிக்­காவை அடைந்த அவ்­வி­மானம் பின்னர், அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தைக் கடந்து, கடந்த 3 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை மீண்டும் புது டில்­லியை அடைந்­தது.

இதன் மூலம் உலகை சுற்­றி­வரும் பய­ணத்தை இவ்­வி­மானம் பூர்த்தி செய்­தது. போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த இவ்­வி­மா­னத்தின் விமா­னிகள், விமான சிப்­பந்­திகள், விமா­னத்தை சோத­னை­யிட்டு அதன் பய­ணத்­துக்கு அனு­மதி அளித்த பொறி­யி­ய­லா­ளர்கள், விமானம் புறப்­ப­டு­வ­தற்கு அங்­கீ­காரம் அளித்த வான் போக்­கு­வ­ரத்துக் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரிகள் அனை­வரும் பெண்­க­ளாக இருந்­தனர் எனவும் எயார் இண்­டியா நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

முற்­றிலும் பெண்­களை மாத்­திரம் ஊழி­யர்­க­ளாகக் கொண்ட பய­ணிகள் விமா­னிகள் சேவை பல நாடு­களில் நடத்­தப்­பட்­டுள்ள போதிலும், அத்­த­கைய ஒரு விமானம் உலகை சுற்றி வந்­தமை இதுவே முதல் தட­வையாகும் என எயார் இண்­டியா நிறு­வனம் கூறு­கி­றது.

இதை கின்னஸ் சாத­னை­யாக பதிவு செய்­வ­தற்கு விண்­ணப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை மறுதினம் வேறு பல சர்வதேச மற்றும் உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் விமானங்களில் பெண்களை முற்றிலும் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.