தமிழகத்தில் மாணவி ஒருவர் பெற்றோர் உயிரிழந்த நிலையில் பன்னிரண்டாம் பொதுத்தேர்வெழுத வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மேட்டூர் பகுதியை சேர்ந்த அமிர்த கௌரி என்ற மாணவியே இவ்வாறு எழுச்சியூட்டும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று அமிர் கௌரியின் பெற்றோர்களான முருகேசன், சுமதி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், முருகேசன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுமதியும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்த தம்பதியினரின் மூன்றவாது மகளான அமிர்த கௌரி, பொறியாளராக வேண்டும் என்ற பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற, மிகுந்த துக்கத்திற்கு இடையேயும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதியுள்ளார்.






