வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஊடகமாநாடு!!

826

 
வவுனியா மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தில் 2017ம் ஆண்டிற்கான ஊடகமாநாடு உதவிப்பணிப்பாளர் சுனில்ஜெயகமா தலைமையில் மாவட்ட காரியலாயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று(07.03.2017) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.

இம் மாநாட்டில் கடந்த வருடத்திற்கான செயற்பாடுகளும் இந்த வருடத்திற்கான செயற்பாட்டு ஊடகமாநாடாக இடம்பெற்றது.

விஷேட நிகழ்வாக வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வுகளில் தேசிய இளைஞர்கள் சேவை மன்றம் 2017ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்த தீர்மானித்த வேலைத்திட்டங்கள், இளைஞர் யுவதிகளின்பொருளாதார சக்தி விருத்தி செய்தல், 13-29 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளின் அங்கத்துவம், இவ்வயதுக்கு உட்பட்ட 35 வயதுக்குள் சேவை வழங்கல், பிரதேச செயலாளர் பிரதேச மட்டத்தில் நிஸ்கோ செயற்குழு உருவாக்குதல் போன்ற விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டதுடன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலும் வழங்கப்பட்டது.

இவ் ஊடக மாநாட்டில் மாவட்ட இளைஞர்கள் சேவை அதிகாரி டி.எம்.கே.அபேசிங்க, மாவட்ட இளைஞர் சேவைகள் அலுவலக நிர்வாக பொறுப்பாளர் ஜ.சுகானி ஆகியோர் கலந்து கொண்டனர்.