வவுனியாவில் பெண்கள் தினத்தில் ஒப்பாரிப் போராட்டம் : மூவர் மயங்கி வீழ்ந்தனர்!!

501

 
வவுனியாவில் கடந்த 13 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (08.03.2017) 13ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் மகளிர்தினமான இன்று அனாதைகளாக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டுள்ள அவர்கள் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துவிதமாக போராட்டம் நடைபெறும் இடத்தில் இன்று (08.03.2017) மதியம் 12.00 மணிமுதல் 12.30 மணிவரை சுமார் 30 நிமிடங்கள் தங்களது உள்ளத்தில் இருக்கும் வேதனைகள், துன்பங்களை வெளிப்படுத்தும் ஒருவடிவமாக இந்த ஒருமித்த அழுகுரல்களாவது அனைவரின் காதுகளையும் எட்டி அவர்களது மனச்சாட்சியைத் தூண்டட்டும் எனத் தெரிவித்து ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஒப்பாரிப்போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தாய்மார் மயங்கி கீழே வீழ்ந்தனர். எனினும் வைத்தியசாலைக்கு செல்லாமல் தொடர்ந்தும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.