தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த அலை, மாதவன் நடித்து வெளிவந்த யாவரும் நலம் ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் கே.குமார் தெலுங்கில் மனம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல மூத்த நடிகரான நாகேஸ்வர ராவ், அவரது மகன் நாகர்ஜூனா, மற்றும் அவருடைய பேரன் நாகசைதன்யா ஆகியோர் நடிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது. நட்சத்திர குடும்பம் நடிக்கும் இப்படத்தில் நடிக்க ஸ்ரேயாவும், சமந்தாவும் தேர்வாகியிருக்கிறார்கள்.
நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவும், நாகசைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கிறார்கள். நட்சத்திர குடும்பத்துடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தால் ஸ்ரேயாவும், சமந்தாவும் சந்தோஷத்தில் உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.