அமெரிக்காவைச் சேர்ந்த எமி குரோஸ் ரொசென்தல் எனும் இப்பெண் சிறுவர் கதை எழுத்தாளராவர். 50 வயதான இவருக்கு சூலகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில காலமே இவர் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம். இதனால் தனது கணவருக்கு மற்றொரு துணையைத் தேடிக்கொள்வதற்காக, டேட்டிங் தளமொன்றில் கணவரின் விபரக் குறிப்பை எழுதியுள்ளார் எமி குரொஸ்.
தனது 24 ஆவது வயதில் தனது கணவர் ஜேசனை முதன்முதலில் சந்தித்தார் எமி. கடந்த 26 வருடங்களாக இணைந்து வாழும் இத் தம்பதியினருக்கு வளர்ந்த பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், தான் புற்றுநோயால் இறந்தவுடன் கணவர் தனிமையில் வாடாமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என எமி குரொஸ் விரும்புகிறார்.
தனது கணவரின் வாழ்வில் மற்றொரு காதல் கதை உருவாகுவதை தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.