புற்­று­நோயால் இறக்­க­வுள்ள பெண் கண­வ­ருக்கு மற்­றொரு துணையை தேடுகிறார்!!

254

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த எமி குரோஸ் ரொசென்தல் எனும் இப்பெண் சிறுவர் கதை எழுத்­தா­ள­ராவர். 50 வய­தான இவருக்கு சூலகப் புற்­றுநோய் ஏற்­பட்­டுள்­ளது.

இன்னும் சில காலமே இவர் உயி­ருடன் இருப்பார் என மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்­ள­னராம். இதனால் தனது கண­வ­ருக்கு மற்­றொரு துணையைத் தேடிக்­கொள்­வ­தற்­காக, டேட்டிங் தள­மொன்றில் கண­வரின் விபரக் குறிப்பை எழு­தி­யுள்ளார் எமி குரொஸ்.

தனது 24 ஆவது வயதில் தனது கணவர் ஜேசனை முதன்­மு­தலில் சந்­தித்தார் எமி. கடந்த 26 வரு­டங்­க­ளாக இணைந்து வாழும் இத்­ தம்­ப­தி­யி­ன­ருக்கு வளர்ந்த பிள்­ளை­களும் உள்­ளனர். இந்­நி­லையில், தான் புற்­று­நோயால் இறந்­த­வுடன் கணவர் தனி­மையில் வாடாமல் மற்­றொரு பெண்ணை திரு­மணம் செய்­து­கொள்ள வேண்டும் என எமி குரொஸ் விரும்­பு­கிறார்.

தனது கண­வரின் வாழ்வில் மற்­றொரு காதல் கதை உருவாகுவதை தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.