வவுனியா ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி : இரு சிறுவர்கள் படுகாயம்!!

269

 
வவுனியாவில் இன்று (09.03.2017) காலை 6.30 மணியளவில் ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து நேற்றைய தினம் ( 08.03.2017) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி இன்று (09.03.2017) காலை 6.30 மணியளவில் வவுனியா ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கும் ஒமந்தை பாடசாலைக்கும் இடையே காணப்படும் பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் கந்தையா மாரியாயி என்ற 56 வயதுடைய பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்தள்ளதுடன் அவரின் மகளின் பிள்ளைகளான டிலானி 2வயது, டெனுசன் 7வயதுடைய இரு சிறுவர்களும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஓமந்தை போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.