வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா!!

683

 
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் நுழைவாயில் நேற்று (09.03.2017) காலை 10 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி ப. கமலேஸ்வரி தலைமையில் யாழ்ப்பாண இந்திய உயர்ஸ்தானிகர் ஆ.நடராஜாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

2014ம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்பட்ட பொருளியல் வினாவிடைப் போட்டியில் பாடசாலை மாணவிகள் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக கிடைத்த நிதிப்பங்களிப்புடன் நுழைவாயில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நுழைவாயிலை திறந்து வைத்ததையடுத்து நுழைவாயிலை அலங்கரித்த சிற்பந்திகளுக்கு கௌரவிப்பு, கலை நிகழ்வுகள், இந்திய உயர்ஸ்தானிகள் பாடசாலைக்கு ஒரு தொகுதி நூல்களையும் வழங்கிவைத்தார். பாடசாலை மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் எம்.இராதாகிருஷ்ணன், வவுனியா தெற்கு வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி.நட்ராஜ், ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர் திருமதி.அன்ரன் சேமராஜா, பிரதி அதிபர், உப அதிபர், அயல்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.