வவுனியாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!!

339

வவுனியாவில் நேற்று (09.03) பிற்பகல் 2.30 மணியளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பேரை வவுனியா உதவி மதுவரி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் வீதியில் முச்சக்கரவண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கையும் மெய்யுமாக இரண்டு பேரைக் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா உதவி மதுவரி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.