பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்த வைத்தியசாலை!!

263

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தமை அம்பலமாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு வெல்லவாய நீதிவானும் மாவட்ட நீதவானுமாகிய கேசர சமரதிவாகர உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவை பணிப்பாளர் மற்றும் வைத்திய சபைக்கு நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகங்களுக்கான குறித்த சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரது இடது கையின் கரத்தின் மீது பாரிய காயம் ஒன்று காணப்பட்டுள்ளது.

காயத்தை அவதானித்த நீதவான் அது தொடர்பில் சிறுமியிடம் விளக்கம் கேட்டுள்ளார். தனக்கு குடும்ப கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.