பாலியல் தொழிலில் மலர்ந்த காதல்!!

341


மத்தியபிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகள் பாலியல் தொழிலாளியாக தான் இருக்க வேண்டும் என வற்புறுத்தி அவரை பாலியல் கும்பலிடம் தள்ளிவிட்டு கொடுமை செய்துள்ளார்.ஆனால், தனக்கு இந்த தொழில் பிடிக்கவில்லை என்றும் தான் படிக்கவேண்டும் என பூஜா ஆசைப்பட்டுள்ளார்.

Banchhara பிரிவை சேர்ந்த இந்த மக்கள் அதிகமாக பாலியல் தொழில் செய்வதையே விரும்புகின்றனர். அதன்படியே, தங்களுக்கு பிறக்கும் பிள்ளைகளையும் பாலியல் தொழிலுக்கு ஆளாக்குகின்றனர்.இந்த பிரிவை சேர்ந்த பூஜாவுக்கு இந்த நிலைமையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாலியல் தொழில் நடைபெறும் இடத்திற்கு சோதனை செய்ய வந்த தன்னார்வு தொண்டு அமைப்பில் பணியாற்றிய விகாஷ் என்பவரிடம், தனக்கு பாலியல் தொழிலில் ஈடுபட விருப்பமில்லை என்று பூஜா கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அங்கிருந்து மீட்கப்பட்ட பூஜா, படிப்பதற்கான முயற்சிகளை தன்னார்வ நிறுவனத்தின் உதவியுடன் விகாஷ் செய்து கொடுத்துள்ளார்.இதற்கிடையில், பூஜாவின் மீது விகாஷ்க்கு காதல் ஏற்படவே, பூஜா படிக்கும்வரை 3 ஆண்டுகள் காத்திருந்த விகாஷ் அதன் பிறகு அவளிடம் திருமணம் செய்துகொள்ள தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தனது மகள் படிப்பதை அறிந்த பூஜாவின் தாயார், அவளை எப்படியாவது மீண்டும் பாலியல் தொழிலுக்கு தள்ளிவிட வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.ஆனால், பொலிசார் சம்மதத்துடன் பூஜாவை விகாஷ் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினரை பலரும் வாழ்த்தியுள்ளனர்.