கட்டுநாயக்க ஓடுபாதை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் சீனப் பிரஜைகள் கைது!

525


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் சீனப் பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.6 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகைகளை இலங்கைக்குள் கடத்த முயற்சித்த குற்றத்திற்காகவே சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவே இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக கடத்தப்படும் மிகப் பெரிய சிகரெட் தொகை என சுங்கத் திணைக்கள பிரதி பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பணிபுரியும் சீன தொழிலாளர்களுக்கு சீன சிகரெட்டுகளுக்கான தேவை அதிகம் உள்ளது. ஆனால் வெளிநாட்டு சிகரட்டுகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்களிடம் இருந்து தலா 1 லட்சம் அபராதம் பெற்றுக்கொண்டப் பின்னர், குறித்த சீனத் தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.