வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (10.03.2017) காலை 9.30 மணியளவில் சர்வதேச மகளிர் தினமும் உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், சிறப்பு விருந்தினராக திரு.பொஜன் இலங்கைக்கான ஒக்ஸ்பாம் வதிவிட பிரதிநிதி , வைத்தியர் ஏ.ரேவதி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் , மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
உள்ளுர் உற்பத்தி பொருட்களின் விற்பனையும், பெண்கள் தொடர்பான விழிப்புனர்வு நாடகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.































