வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்!!

290

 
வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (11.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இப் பொதுக்கூட்டத்திற்கு வவுனியா பிரதேச செயலாளர் கா உதயராஜா, நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச கலாசார உத்தியோகத்தர், வவுனியா மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திரு.அபேயசிங்க, திரு.சுகானி, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், இளைஞர் சேவை அதிகாரிகளான ரதித்திரா, திரு.சசிக்குமார், மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் திரு.கிரிதரன், மற்றும் இளைஞர் கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.