வவுனியாவில் மாடுவெட்டும் கொல்களம் மூடல் ! 15 தொழிலாளர்கள் பாதிப்பு!!

463

வவுனியா சோயா வீதியிலிருக்கும் மாடுகள் வெட்டும் கொல்களத்தில்  கடந்த நான்கு தினங்களாக மாடுகள் வெட்டும் பணிகள் இடம்பெறவில்லை. இதன் காரணமாக அங்கு பணிபுரியும் 15ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

நேற்று (11.03.2017) தமது பணிகளை மேற்கொள்வதற்கு கொல்களத்திற்கு  சென்ற தொழிலாளர்கள் கால்நடை வைத்திய அதிகாரி வருகை தந்திருந்தும் நகரசபை சுகாதார பரிசோதகர்கள் சமூகமளிக்கவில்லை. இதன் காரணமாக நேற்று மூன்றாவது நாளாகவும் பணிக்கு சமூகமளித்த தொழிலாளர்கள் பணி இடம்பெறவில்லை என்று திரும்பிச் சென்றனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

நாங்கள் 15ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாடு வெட்டும் தொழிலினை நம்பி குடும்பத்தினை நடாத்தி வருவதாகவும் கடந்த சில தினங்களாக வேலைக்குச் சென்றும் அங்கு அதிகாரிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை வைத்து தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டுள்ளதாகவும் தமது பிள்ளைகள், மனைவிமார் பெரும் சிரமத்தில் தமது குடும்பங்களை நடாத்திக் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், இன்று (11.03.2017) மூன்றாவது நாளாகவும் பணிகள் இடம்பெறவில்லை இன்றும் ஏறமாற்றத்துடனனே வீடு செல்லவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.