வவுனியாவில் 17வது நாளாகத் தொடரும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்!!

511

 
வவுனியாவில் கடந்த 17 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(12.03.2017) 17வது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும், அரசியல்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும், அவசரகாலச்சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இப் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்ப்பாட்டில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.