வவுனியாவில் 22பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று!!

278

 
வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று எற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்ப்பட்டுள்ளது. அண்மையில் வவுனியாவில் பன்றிக்காச்சல் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொற்று ஏற்பட வாய்புக்கள் உள்ளதால் சிறியவர்களை தேவையின்றி வைத்தியசாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறும் குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார், சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும் தற்போது 22பேருக்கு பன்றிக்காச்சல் இனங்காணப்பட்டு 16 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு சென்றுள்ளதாகவும் 5பேர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைக்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள் அனைவருக்கும் சுவாசத்தை பாதிக்காதவாறு முகக்கவசம் அணிந்து இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.