வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற மாணவனைக் காணவில்லை!!

567

வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் மாலையாகியும் வீடு வரவில்லை என்று தயார் இன்று (12.03) மாலை 6 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று (11.03) மாலை 3 மணிக்கு தனியார் கல்வி நிலையத்தில் தனது வகுப்புக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அனுராஜா லலோசன் என்ற 14 வயது மாணவன் 3.30 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகவும், தனது துவிச்சக்கரவண்டியை அதே கல்வி நிலையத்தில் கல்வி கற்று வரும் அவரது சகோதரரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துவிட்டு தனியார் கல்வி நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளதாக மாணவனுடன் கல்வி கற்கும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர் என்று தாயார் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவன் கடந்த வாரம் பாடசாலைக்கு சமூகளிக்கவில்லை என பாடசாலையினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு நேற்று (11.03) காலை பொலிசார் குறித்த மாணவனின் வீட்டிற்கு விளக்கத்திற்குச் சென்றுள்ளனர். சென்றபோது பெற்றோர் இல்லை வீட்டில் இருக்கவில்லை. குறித்த மாணவனுடன் பொலிசார் கலந்துரையாடிவிட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் இன்று மதியம் உணவருந்திவிட்டு தாயிடம் தனியார் வகுப்புக்குச் செல்வதாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். மாலை 6 மணியாகியும் மாணவன் வீடுவரவில்லை. இதையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.