பாடசாலை மாணவர்கள் இருவர் கண்டி, அளவத்துகொடை நகர வீதியில் பணப்பை ஒன்றைக் கண்டெடுத்து அளவத்துகொடை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
அளவத்துகொடை தேசிய பாடசாலையில் 9 ஆம் ஆண்டு சீ வகுப்பில் கல்வி பயிலும் கே.நிரஞ்சன் மற்றும் 8 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் கே.எஸ்.செல்வரத்னம் நிலக் ஷன் ஆகிய மாணவர்களே இவ்வாறு ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பணப் பையில் 3,430 ரூபா பணமும் அடையாள அட்டை உட்பட சில ஆவணங்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பணப்பையை பெற்றுக் கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.எச். ஜயதிலக்க, அதன் உரிமையாளரை பொலிஸ் நிலையத்துக்கு வரழைத்து பையை ஒப்படைத்தார்.
இம்மாணவர்களின் செயல் முன்மாதிரியாக ஏனைய மாணவர்களுக்கு அமைய வேண்டுமென பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.