வீதியில் கிடந்த பணப்பையை கண்டெடுத்து பொலிஸில் ஒப்படைத்த இரு மாணவர்கள்!!

247

பாடசாலை மாண­வர்கள் இருவர் கண்டி, அள­வத்­து­கொடை நகர வீதியில் பணப்பை ஒன்றைக் கண்­டெ­டுத்து அள­வத்­து­கொடை பொலிஸில் ஒப்ப­டைத்­துள்­ளனர்.

அளவத்­து­கொடை தேசிய பாட­சா­லையில் 9 ஆம் ஆண்டு சீ வகுப்பில் கல்வி பயிலும் கே.நிரஞ்சன் மற்றும் 8 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் கே.எஸ்.செல்­வ­ரத்னம் நிலக் ஷன் ஆகிய மாண­வர்களே இவ்­வாறு ஒப்ப­டைத்­த­தாக பொலி­ஸார் ­தெ­ரி­வித்­தனர்.

இப்பணப் பையில் 3,430 ரூபா பணமும் அடை­யாள அட்டை உட்­பட சில ஆவ­ணங்­களும் இருந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இப்பணப்பையை பெற்றுக் கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி எம்.எம்.எச். ஜய­தி­லக்க, அதன்  உரிமை­யா­ளரை பொலிஸ் நிலை­யத்­துக்கு வர­ழைத்து பையை ஒப்­ப­டைத்தார்.

இம்­மா­ண­வர்­களின் செயல் முன்­மா­திரியாக ஏனைய மாண­வர்­க­ளுக்கு அமைய வேண்டுமென பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.