ஆண் ஒருவரை இரு தடவைகள் வல்லுறவுக்குட்படுத்தியதாக யுவதி மீது குற்றச்சாட்டு!!

326

ஆண் ஒருவரை இரு தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பிரித்தானிய யுவதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. செத் ஷீல்ட்ஸ் நகரைச் சேர்ந்த 26 வயதான கெத்தி பிரனென் எனும் யுவதி மீதே இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இவர் குற்றத்தை புரிந்தார் என நியூகாசல் கிறவுண் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை நீதிமன்றத்தில் கெத்தி பிரெனன் ஆஜர்படுத்தப்பட்டார். தான் நிரபராதி அல்ல என அவர் கூறினார்.

இவ் வழக்கு விவாதம் டிசெம்பர் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் என நீதிபதி ரொபர்ட் ஸ்பரக் அறிவித்தார். அத்துடன் மீளாய்வு விசாரணை க்காக செப்டெம்பர் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் கெத்தி பிரனன் ஆஜராக வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

அதுவரை நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல கெத்தி பிரெனனுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். சௌத் ஷீல்ட்ஸ் நகரிலுள்ள குறித்த முகவரியில் கெத்தி பிரெனன் வசிக்க வேண்டும். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபரை கெத்தி பிரெனன் தொடர்புகொள்ளக்கூடாது ஆகியனவும் இந்த நிபந்தனைகளில் அடங்கும்.