27 வருடங்களாக கணவரை சந்திக்காத சசிகலா!!

338

சசிகலா கடந்த 27 வருடங்களாக தனது கணவர் நடராஜனை சந்திக்கவில்லை என அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினரகரன் கூறியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டியளித்த தினரகன், கடந்த பொங்கல் விழாவின் போது எனது சித்தப்பா நடராஜன், குடும்ப ஆட்சி நடத்துகிறோம் என பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால் அவர் கூறியதற்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கடந்த 1990ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சித்தப்பா வெளியேற்றப்பட்ட பின்னர், சித்தி சசிகலா அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.

சொல்லப்போனால் கடந்த 27 வருடங்களாக சித்திக்கும் சித்தப்பாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். தினகரனின் இந்த கருத்து பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் எவ்வித தொடர்பும் இல்லாத போது, சசிகலா சிறைக்கு சென்ற போது தனது கணவர் நடராஜனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டது எப்படி, ஜெயலலிதா இறந்தவுடன் நடராஜன் எப்படி முதல் ஆளாக வந்து நின்றார் என கேள்விகள் பலர் தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது.